தமிழ்நாடு

தமிழகத்தில் இடியுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் விரைவில் வரும் 9, 10 ஆகிய தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய நல்ல மழைக்கு வாய்ப்பு என்றும் ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் கடலோர மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலை இருக்கும் என்று கூறியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடுமையான வெப்பம் இருந்துவரும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending

Exit mobile version