சினிமா செய்திகள்
பேட்ட படத்துடன் மோதல் இல்லை – அஜித் சொன்னதை வெளிப்படுத்திய சிவா!
பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 10ம் தேதி, அதாவது நாளை மறுநாள் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் வெளியாகின்றன. நள்ளிரவு 1.30 மணிக்கு விஸ்வாசம் சில தியேட்டர்களில் பிரத்யேக முதல்காட்சியாக வெளியாகின்றன. பேட்ட படம் அதிகாலை 4.30 மணிக்கு ரிலீஸ் செய்யப்படுகின்றன.
தியேட்டர்களில் இருந்த போட்டியை, தியேட்டர்கள் சங்கம் கூடி சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தி ஆளுக்கு தலா 450 தியேட்டர்களை ஒதுக்கியுள்ளன. இரண்டு படமும் தனித்தனியே ரிலீஸ் ஆகி இருந்தால், 800 தியேட்டர்களில் ஒவ்வொரு படமும் வெளியாகியிருக்கும். பொங்கல் ரேஸ் என்பதால், தலா 450 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதனால், தயாரிப்பு தரப்புக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆனால், இம்முறை தியேட்டர்கள் உரிமையாளர்களுக்குத் தான் நிஜ பொங்கலே. தமிழ்நாட்டில் உள்ள 900 தியேட்டர்களும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அடுத்த 10 நாளைக்கு ஓடினால், அமோக வசூலை அள்ளி விடலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், விஸ்வாசம் மற்றும் பேட்ட படத்தின் போட்டிக் குறித்து விடையளிக்கும் விதமாக விஸ்வாசம் இயக்குநர் சிவா, ”நாம வேலை பார்க்க வந்துருக்கோம்.. யாருடனும் போட்டிப் போட இங்க வரலை”னு அடிக்கடி சொல்வார் என ஒரு பேட்டியில் இதற்கு பதிலளித்துள்ளார்.
இரண்டு படங்களுமே ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த மாஸ் மசாலா படங்கள் என்பதால், வரும் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு செம விருந்து காத்துக் கொண்டிருக்கிறது.
டிக்கெட் புக்கிங்கில் விஸ்வாசம் படம் பேட்ட படத்தை பல இடங்களில் முந்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.