சினிமா செய்திகள்

ஆணவக்கொலையை விட கொடூரமானது உலகில் எதுவுமில்லை!

Published

on

ஆணவக்கொலையை விட கொடூரமானது உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை என சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பெரியார் கூட்டத்தில் பங்கேற்ற சத்யராஜிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க அவரை அழைத்து நீங்க வந்து பேசுங்க எனக் கூறினார். பின்னர் பேசிய சத்யராஜ், ஆணவக்கொலையை விட கொடூரமானது உலகில் வேறு எதுவும் இல்லை என காட்டமாக தெரிவித்தார்.

சமீபத்தில் தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதி ஆணவத்தால் ஏற்படும் கொலைகளை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். கலப்பு திருமணங்கள் பெருக வேண்டும் என்றார். பின்னர், எழுவர் விடுதலை குறித்த கேள்விக்கு விடையளித்த சத்யராஜ், பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் 28 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version