சினிமா செய்திகள்
அப்போ நாகினி இப்போ மோகினி!
நாகினி சீரியலில் நாயகியாக நடித்த மெளனி ராய் ஹிந்தியில் மட்டுமின்றி டப்பிங் சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பல இளைஞர்களின் கனவுகளை களவாடினார்.
மெளனி ராயின் வசீகரமும், தேர்ந்த நடிப்பும் அவரை அக்ஷய் குமாரின் கோல்ட் படத்தில் நாயகியாக மாற்றியது. மேலும், சல்மான் கானுக்கும் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
டிசம்பரில் வெளியான கேஜிஎஃப் படத்தின் ஹிந்தி வெர்ஷனில் ஒரு பாடலுக்கு இவர் போட்ட குத்து டான்ஸ் அந்த பாடலை யூடியூபில் பல கோடி பேரை பார்க்க வைத்தது.
அதே பாடலுக்கு தமிழ் வெர்ஷனில் தமன்னா நடனமாடியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மெளனி ராய் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் மரத்தின் நிழலில் புல் தரையில் படுத்துக் கொண்டு காதில் ஒற்றைப் பூவை வைத்துக் கொண்டு தூங்குவது போன்ற போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.