தமிழ்நாடு
லிப்ட் கேட்டவரிடம் பெட்ரோலுக்கு பணம் கேட்ட வாலிபர்: கொடுக்க மறுத்ததால் கொலை!
லிப்ட் கேட்ட நபரிடம் ரூபாய் 100 பெட்ரோலுக்கு பணம் கேட்ட நிலையில் பணம் கொடுக்க மறுத்ததால் லிப்ட் கொடுத்த நபர், லிப்ட் கேட்ட நபரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை கொளத்தூரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் காவல் நிலையத்திற்கு வந்தததை அடுத்து பிணத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை செய்தனர்
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது இளைஞர் ஒருவர் இறந்த நபரிடம் வாக்குவாதம் செய்வதும் அதன் பின்னர்தான் அவரை தாக்குவதுமான காட்சிகள் இருந்தது
இதனை அடுத்து சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.