தமிழ்நாடு

கண்ணீர் விட்டு அழுத கே.எஸ்.அழகிரி: அதிர்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள்!

Published

on

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத காட்சியை கண்டு காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தையை கடந்த சில நாட்களாக நடத்தி வருகின்றன என்பது தெரிந்ததே. காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளுக்கும் திமுக தரும் பகுதிகளுக்கும் இடையிலான எண்ணிக்கை மிகவும் வித்தியாசமாக இருந்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக வாய்ப்பிருப்பதாகவும் கருதப்பட்டது. இந்த நிலையில் திமுகவுடன் தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று கூடியது.

இந்த கூட்டத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை விட நம்மை நடத்தும் விதம்…. என்று கூறி கேஎஸ் அழகிரி கண்கலங்கியதைப் பார்த்து காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதிலிருந்து காங்கிரஸ் கட்சியை திமுக எந்த விதத்தில் நடந்து இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிவதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர். எனவேதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாக இந்த நிகழ்வுக்குப் பின் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்

seithichurul

Trending

Exit mobile version