சினிமா

சாகுந்தலம்’ சமந்தாவின் நகை மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published

on

நடிகை சமந்தாவின் ‘சாகுந்தலம்’ படம் அடுத்த மாதம் வெளியாக வெளியாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கில் தற்போது கவனம் செலுத்தி வரக்கூடிய நடிகை சமந்தா தற்போது பான் இந்தியன் படமாக வெளியாக இருக்கும் ‘சாகுந்தல’த்திற்காக காத்திருக்கிறார். இந்தப் படம் தனது மனதிற்கு நெருக்கமானது என்றும் தெரிவித்தார். மகாகவி காளிதாசரின் ’அபிஞான சாகுந்தலம்’ படைப்பின் சகுந்தலா தேவி கதாப்பாத்திரத்தை தழுவி, இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. அனுஷ்கா ரெட்டி நடித்த ’ருத்ரமாதேவி’ திரைப்படத்தை இயக்கிய குணசேகர் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

3டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் புரொமோஷனும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘சாகுந்தலம்’ திரைப்படத்தில் சமந்தா அணிந்து வந்த நகைகள் குறித்தானது.

இதிகாச கதைப்படி சகுந்தலையின் வாழ்வு பெருமளவு வனத்திலேயே இடம்பெறும். கணிசமான சில காட்சிகள் மட்டுமே அரண்மனையில் இருக்கும். அதனால், சமந்தாவுக்கான தங்கம் மற்றும் வைர நகைகளை நிஜமாகவே வாங்கியுள்ளது. அதன்படி, சுமார் ரூ.14 கோடி மதிப்பிலான நகைகளின் வடிவமைப்புக்காக மட்டுமே 8 மாதங்கள் எடுத்துக் கொண்டுள்ளது படக்குழு. நகை நிறுவனம் சார்பில் சிறப்பு பதிப்பாக, சாகுந்தலம் கலெக்‌ஷன்ஸ் என்ற தலைப்பில் அந்த டிஸைன்களை விற்பனை செய்யவும் முடிவு செய்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

தற்போது சாகுந்தலம் படத்துக்காக தங்கம் மற்றும் வைரத்திலான நிஜ ஆபரணங்களுடன் சமந்தா தோன்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version