சினிமா

அடுத்தப் படம் எடுக்க இயக்குநர் சிவாவை உறுதி செய்தது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்

Published

on

சென்னை: இயக்குநர் சிவா, அடுத்ததாக யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற செய்தியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

கார்த்தியின் ‘சிறுத்தை’ படத்தைச் சிவா இயக்கியிருந்தார். இதனையடுத்து அஜித்தின் ‘வீரம்’ படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து, சிவா இயக்கிய ‘வேதாளம்’ படத்திலும் அஜித்தே நடித்தார். இதுவும் சூப்பர் ஹிட்டாக, மீண்டும் இதே கூட்டணியில் கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘விவேகம்’.

தற்போது, சிவா இயக்கும் ‘விஸ்வாசம்’ படத்திலும் அஜித் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் அஜித் டபுள் ஆக்ஷனில் வலம் வரவுள்ளாராம். ஆனாலும், நான்காவது முறையும் சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் நடிகர் அஜீத். இதற்கிடையில், மீண்டும் சிவா அஜித் கூட்டணி 5 வது முறையும் இணையாயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சிவா இயக்கும் அடுத்தப் படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

இந்நிலையில், இக்கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து இயக்குநர் சிவா, தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம். இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளதாம். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது.

 

Trending

Exit mobile version