சினிமா செய்திகள்

படப்பிடிப்பு தொடங்கும் முன் விவேக்கிற்கு மரியாதை செலுத்திய உதயநிதி!

Published

on

உதயநிதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் விவேக்கின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்ட்டிக்கிள் 15 என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. பாலிவுட்டில் தயாரித்த போனிகபூர் தமிழிலும் இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாடலாசிரியரான அருண் ராஜா காமராஜ் ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘கனா’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஆர்ட்டிக்கிள் 15’ ரீமேக் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் நேற்று விவேக்கின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து படக்குழுவினர் மரியாதை செலுத்தினார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சியில் நடைபெற்றுவரும் ’ஆர்ட்டிக்கிள் 15’ பட தமிழ் ரீமேக் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். மறைந்த அண்ணன் விவேக் அவர்களின் திருவுருவப்படத்துக்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு மரியாதை செய்தோம். சமூக மாற்றத்துக்காகவும் சுற்றுச்சூழலை காக்கவும் குரல் கொடுத்த அண்ணனின் வழி நடப்போம். இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் சகோதரர் அருண்ராஜா காமராஜ் அவர்கள் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டோம். தயாரிப்பாளர் போனிகபூர் அவர்களுக்கு நன்றி’ என குறிப்பிட்டிருந்தார்.

seithichurul

Trending

Exit mobile version