இந்தியா

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published

on

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளால் கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனை அடுத்து இதுகுறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்க்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என்றும் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஹிஜாப் தடைக்கு எதிராக சரியான முகாந்திரம் எதுவும் வைக்கப்படவில்லை என்றும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

 

Trending

Exit mobile version