தமிழ்நாடு
தமிழகத்தில் குளுகுளு வெப்பநிலை.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக அதிகமாக வாட்டி வரும் குளிருக்கு என்ன காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக மிக அதிக அளவில் குளிரான வானிலை நிலவி வருகிறது. முக்கியமாக அதிகாலையில் மிக அதிக அளவில் குளிர் நிலவி வருகிறது.
இது தொடக்கத்தில் நன்றாக இருந்தது. ஆனால் தற்போது இந்த குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையில் கடந்த வாரம் வெப்பநிலை 11 டிகிரி செல்ஸியஸ் வரை குறைந்தது. சென்னையில் சில இடங்களில் 9 டிகிரி செல்ஸியஸ் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை மட்டுமில்லாமல் மற்ற பகுதிகளிலும் வெப்பநிலை குறைந்தது. ஊட்டி, கொடைக்கானலில் 0 டிகிரி செல்ஸியஸை தொட்டதும் குறிப்பிடத்தக்கது.