தமிழ்நாடு
மிரட்டப்பட்டாரா? .. பாக்யராஜ் பதவி விலக காரணம் என்ன?
சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் பதவி விலகி உள்ளார்.
சர்கார் கதை பிரச்சனை தொடர்பாக இயக்குனர் பாக்யராஜ் கடுமையான நெருக்கடியை சந்தித்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் என்ன மாதிரியான நெருக்கடிகளை சந்தித்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை.
அவருக்கு அவர் இருக்கும் சினிமா துறையில் இருந்தே சில நெருக்கடிகள் வந்ததாக கூறப்படுகிறது.அதேபோல் வீட்டிலும் கூட இவர் சில மனக்கஷ்டங்கள் வந்துள்ளது. மகன் சாந்தனு விஜயின் ரசிகர் என்பதால் வீட்டில் சிறிய மனக்கஷ்டம் வந்ததாக கூறப்படுகிறது.
இது எல்லாம் இல்லாமல், அவருக்கு சில மிரட்டல்கள் வந்தது என்றும் கூட கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சக்கூடிய ஆள் இல்லை பாக்யராஜ் என்றும் கூறுகிறார்கள்.
இது அவரது தனிப்பட்ட முடிவு, அவர் விரைவில் வேறு சில முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று தெரிவிக்கிறார்கள்.