Connect with us

இந்தியா

ஒரு பிளேட் அரிசிக்கஞ்சி ரூ.1380: மருத்துவமனை நிர்வாகத்தை அலற வைத்த கொரோனா நோயாளி!

Published

on

தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு கொடுக்கப்பட்ட அரிசி கஞ்சிக்கு 1.380 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து அந்த கொரோனா நோயாளி மருத்துவமனை நிர்வாகத்தை அலற வைத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் சேர்ந்தவர் சபீனா. இவருக்கு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து கேரள அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையம் ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது ரூ.50 ஆயிரம் ரூபாய் கட்ட மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல மணி நேரம் கழித்தும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அரிசி கஞ்சி மற்றும் ஒருசில மாத்திரைகளை மட்டும் கொடுத்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் உள்ள நிலை குறித்து உறவினர்களிடத்தில் போனில் தெரிவித்ததை அடுத்து அவரது உறவினர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தனர்.

இதையடுத்து ஏப்ரல் 19ஆம் தேதி தேதி சபீனா டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது மருத்துவமனை நிர்வாகம் பில் கொடுத்துள்ளது. அதில் 24 மணி நேர சிகிச்சைக்காக மட்டும் 24 ஆயிரத்து 760 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதில் அரிசி கஞ்சி என்ற பெயரில் உணவாகக் கொடுத்து விட்டு அதற்கு 1,380 ரூபாய் கட்டணம் என்று கூறியுள்ளனர். அதேபோல் பி.பி.ஈ கிட் கட்டணமாக 10 ஆயிரத்து 416 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு சபீனா முன்பணமாக கட்டிய தொகையில் இருந்து கழித்து கொண்டு மீதி பணத்தை மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ளது

இந்நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த சபீனா மருத்துவமனையின் அநியாய கட்டணம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரை வாபஸ் பெறுமாறு மருத்துவமனை நிர்வாகம் கெஞ்சி வருகிறதாம். சபீனாவிடம் வசூலித்த பணத்தை உடனடியாக திருப்பி தருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியபோதிலும் சபீனா தனது புகாரை வாபஸ் வாங்க மறுத்துவிட்டதால் மருத்துவமனை நிர்வாகம் தற்போது அலறி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!