தமிழ்நாடு
சுங்க சாவடியில் காரை நிறுத்தி விட்டு பஸ் ஏறி வீட்டுக்கு சென்ற நபர்: அதிர்ச்சி காரணம்!
சுங்கச்சாவடியில் காரை நிறுத்திவிட்டு காரின் உரிமையாளர் பஸ் ஏறி வீட்டுக்கு சென்ற சம்பவம் மதுரை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அருகே திருப்பாச்சேத்தி என்ற பகுதியில் சுங்கச்சாவடியை கார் ஒன்று கடக்க முயன்றது. அப்போது அவருடைய ஃபாஸ்டேக்அக்கவுண்டில் பணம் இல்லாததால் கேட் திறக்கவில்லை. இதனை அடுத்து அவர் ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்தார். ஆனாலும் கேட் திறக்கவில்லை.
இதுகுறித்து அவர் சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ரீசார்ஜ் செய்த பத்து நிமிடங்கள் கழித்துதான் ரீசார்ஜ் செய்த பணம் கணக்கில் ஏறும் என்றும் அதுவரை காத்திருக்கவும் என்றும் கூறினார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் காரை சுங்கச்சாவடியில் 11வது லைனில் நிறுத்திவிட்டு பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் அந்த பாதையில் மற்ற வாகனங்கள் கடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து சுங்கச்சாவடி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் காவல் துறையினர் விரைந்து வந்து அந்த காரை ஓரமாக நகர்த்தி விட்டு இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த காருக்கு உரிமையாளர் ஒரு வழக்கறிஞர் என்று கூறப்படுவதால் பெரும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.