சினிமா செய்திகள்

அடுத்த மாசமாவது ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் ஆகுமா?

Published

on

இயக்குநர் கெளதம் மேனனுக்கு என்னதான் ஆச்சு? தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்தவர், அதற்கடுத்து பெரிய பெரிய சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார்.

விஜய், சூர்யா போன்ற உச்சநட்சத்திரங்களுடன் கைகோர்த்த படங்கள் ஆரம்பிக்காமலேயே ட்ராப் ஆக ஆரம்பித்தன.

மேலும், அவர் தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா நடித்த நெஞ்சிருக்கும் வரை என்ன ஆனது என்ற தகவலே தெரியவில்லை.

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் – மேகா ஆகாஷ் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் 3 ஆண்டுகள் ஆகியும் ரிலீஸ் ஆகாமலே உள்ளது.

அதன் பாடல்கள் இணையத்தில் வெளியாகி பயங்கர ஹிட் ஆன நிலையிலும், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதற்கான காரணங்கள் கெளதம் மேனனுக்கே வெளிச்சம்.

அவர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படமும் எப்போது திரைக்கு வரும் என்று தெரியவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்து விட்டது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மார்ச் மாதம் முடிந்து ஏப்ரலும் வந்துவிட்டது. இம்மாதமும் அந்த படம் வெளியாகும் வாய்ப்பில்லை.

திடீரென இணையத்தில் இருந்த எனை நோக்கிப் பாயும் தோட்டா வீடியோ பாடல்கள் மாயாமாகி விட்டன. இதனால், படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

படக்குழுவோ வரும் மே மாதம் நிச்சயம் படம் ரிலீஸ் ஆகிவிடும் என கூறுகின்றனர். ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக இந்த தேதியில் படம் ரிலீசாகும் என அறிவிக்காதது. இம்முறையும் படம் தள்ளிப் போகுமா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மனதில் விதைத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version