சினிமா

போலந்து நாட்டில் விஜய் அமைக்கும் “சர்கார்“ படத்தின் புதிய அப்டேட் வெளியானது!

Published

on

சர்கார் படம் போலந்து நாட்டில் வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புத் தற்போது வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் படங்களை வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் மிகப் பெரிய வர வேர்ப்பினை பெற்றுள்ளது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்திச் சுரேஷ் நடித்துள்ளார். வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். நிஜ அரசியல்வாதியான பழ.கருப்பையா இப்படத்தில் அரசியல்வாதியாகவே நடித்துள்ளார். ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைப்புயல் மற்றும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா கடந்த 2ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. பாடலாசிரியர் விவேக், அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

தீபாவளிக்குப் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், படத்தின் டீஸர் வரும் அக்டோபர் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீசாகவுள்ளது எனச் சர்கார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்ட இந்தப் படம் போலாந்துலயும் நல்ல தொகைக்குப் போயிருக்கு. தமிழர்கள் கொஞ்சம் அதிகமாக வாழ்ற இடமா ஒரு 4 எடத்த தேர்தெடுத்துப் படத்தை வித்துருக்காங்க.

போலந்து நாட்டின் உரிமையைச் செவன்த் வென்ஸ் சினிமாட்டிக்ஸ்(7TH senes cinematics) நிறுவனம் பெற்றுள்ளது. அங்குப் படம் வெளியாகும் தேதி, விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version