வேலைவாய்ப்பு

நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிக்கு இன்றே கடைசி நாள்!

Published

on

சென்னை பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியிடங்கள் 18 உள்ளது. அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

மொத்த காலியிடங்கள்: 18

வேலை: அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.சி மற்றும் எம்பிசி விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்சி விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாதம் சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000

விண்ணப்பிக்கும் முறை : https://districts.ecourts.gov.in/chennai என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்த விண்ணப்பத்தினைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
தலைமை பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், எழும்பூர் சென்னை 600 008

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழு விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/chennai அல்லது https://districts.ecourts.gov.in/sites/default/files/OA%20Notification.pdf என்னும் லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி : 01.03.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version