தமிழ்நாடு

சிபிஐயின் நேர்மை சுக்குநூறாக உடைந்துவிட்டது.. கலங்கும் முன்னாள் சிபிஐ இயக்குனர்.. குற்றச்சாட்டு!

Published

on

சென்னை: சிபிஐ அமைப்பின் நேர்மை தன்மையை மொத்தமாக நொறுக்கிவிட்டார்கள் என்று முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தெரிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டு இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு கமிட்டி நேற்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தனது நீக்கம் குறித்தும், தனக்கு எதிராக அளிக்கப்பட்டு இருக்கும் புகார்கள் குறித்தும் தற்போது முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா பேட்டியளித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக அவர் புகார்களை அடுக்கியுள்ளார்.

அவர் தனது பேட்டியில், சிபிஐ அமைப்பு என்பது முக்கியமான வழக்குகளை, ஊழல்களை, குற்றங்களை விசாரிக்க கூடிய அமைப்பு. இது சுதந்திரமாக செயல்பட வேண்டும். இதன் தனித்துவம் காக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது அப்படி இல்லை. எல்லாம் மாறிவிட்டது.

seithichurul

Trending

Exit mobile version