வேலைவாய்ப்பு

இந்திய கடற்படையில் பிளஸ் 2 முடித்தவர்களுக்குப் பயிற்சி உடன் வேலை!

Published

on

இந்திய கடற்படையில் செயலர் (எஸ்.எஸ்.ஆர். – பிப்ரவரி 2020) என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் 2200 பேரும், செயலர் (ஏ.ஏ. – பிப்ரவரி 2020) என்ற பயிற்சிப் பிரிவில் 500 பேர் என 2700 பயிற்சியுடன் கூடிய மாலுமி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வயது: விண்ணப்பதாரர்கள் 01.02.2000 மற்றும் 31.01.2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.

கல்வித்தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடலுறுதி திறன் தேர்வு, மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுப் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

பயிற்சி காலம்: 22 வாரம்

உடல் தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடனும், கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள் பார்வைத்திறன் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10-7-2019

seithichurul

Trending

Exit mobile version