சினிமா செய்திகள்

இந்தி தெரியாததால் அவமானப்படுத்தப்பட்ட வெற்றிமாறன்!

Published

on

2011-ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில், இந்தி தெரியாததால் தான் தீவிரவாதி என அவமானப்படுத்தப்பட்டதாக வெற்றிமாறன், விகடன் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட விருது விழா ஒன்றில் பங்கேற்ற பிறகு விமான நிலையம் திரும்பிய போது, இந்தியில் கேள்வி கேட்ட அதிகாரி ஒருவரிடம் தனக்கு இந்தி தெரியாது என்று கூறியுள்ளார்.

அதைக் கேட்ட அந்த அதிகாரி உடனே, தமிழர்களும், காஷ்மீரிகளும் இப்படி தான், எப்பொழுதும் பிரிவினைவாதம் பேசுவீர்கள், தீவிரவாதிகள் என்று அதிகாரி கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் வரை தனியாக நிற்க வைக்கப்பட்டதாகவும், இந்தி தெரியாததால் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version