தமிழ்நாடு

ஆளுநருக்கு வாய் மட்டும்தான் உண்டு… பாஜக வெளிப்படையாகவே மிரட்டுகிறது: முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

Published

on

தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ள சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட உங்களில் ஒருவன் பதில்கள் நிக்ழ்ச்சியில் ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு என விமர்சித்துள்ளார்.

#image_title

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற உங்களில் ஒருவன் பதில்கள் என்ற நிகழ்ச்சியில், ஆளுநர் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது, பாஜக அரசின் ஆளுநர்கள் இதற்கு செவிமடுப்பார்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், இதுவரையிலான செயல்பாடுகளை பார்க்கும்போது, ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு, காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என்றார்.

தொடர்ந்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதில் அளித்த முதல்வர், எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை, வெளிப்படையாகவே பாஜக மிரட்டுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இது. தங்கள் வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version