வேலைவாய்ப்பு

அரசினர் சமூகப்பாதுகாப்புத் துறையின் வேலை! உடனே விண்ணப்பியுங்கள்

Published

on

சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தின் வேலூர் மாவட்டத்தில் காலியிடங்கள் 20 உள்ளது. பாதுகாவலர், சமையலர், உதவியாளர் உடற்கல்வி ஆசிரியர், உளவியலாளர் போன்ற பணியிடங்களைத் தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 20

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: பாதுகாவலர் (Guard) – 12
மாதம் சம்பளம்: ரூ.12,000
வயது: 33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: சமையலர் (Cook) – 02
மாதம் சம்பளம்: ரூ.10,000
வயது: 33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 8 ஆம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வேலை: காவலர் (Watchman) – 02
மாதம் சம்பளம்: ரூ.10,000
வயது: 18 வயதுக்கு மேல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வேலை: உடனாள் (Helper) – 01
மாதம் சம்பளம்: ரூ.8,000
வயது: 18 வயதுக்கு மேல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வேலை: உடற்கல்வி ஆசிரியர் – 01
மாதம் சம்பளம்: ரூ.15,000
வயது: 35 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: உடற்கல்வி ஆசிரியர் சான்று (உயர்நிலை) பெற்றிருக்க வேண்டும்.

வேலை: உளவியலாளர் – 01
மாதம் சம்பளம்: ரூ.15,000
வயது: 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இளங்கலை(ஹானஸ்) அல்லது உளவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: தொழிற்பயிற்றாசிரியர் (வாத்தியம்) – 01
மாதம் சம்பளம்: ரூ.15,000
வயது: 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இசைக்குழுவினர் பயன்படுத்தும் இசை மொழியினை அறிந்திருந்தால் வேண்டும். ஏதேனும் ஒரு வாத்திய கருவி வாசிப்பதில் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://vellore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து உரியச் சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு. அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில், வேலூர் – 632001, வேலூர் மாவட்டம்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2019/02/2019020792.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 20.02.2019 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version