தமிழ்நாடு

மன்சூர் அலிகான் மீண்டும் தேர்தலில் போட்டியா?

Published

on

சமீபத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான் தனி கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் முன்னரே தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டதால், தற்போது அவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

மன்சூர் அலிகான் சமீபத்தில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது தெரிந்ததே. ஆனால் திடீரென நேற்று தான் போட்டியில் இருந்து விலகப் போவதாகவும் தன் மீது வீண்பழி ஏற்படுவதாகவும் தனக்கு தங்குவதற்கு கூட யாரும் வீடு தர மாட்டேன் என்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் திடீரென மீண்டும் போட்டியிடப்போவதாக தற்போது மன்சூரலிகான் அறிவித்துள்ளார். எனது மகள் எனக்கு ஊக்கம் கொடுத்தார் என்றும் வெற்றியோ தோல்வியோ தேர்தலை சந்தித்து விட்டு வாருங்கள் என்று கூறினார் என்றும் அதனால் தேர்தலில் போட்டியிட போகிறேன் என்றும் கூறினார்.

நேற்று போட்டியிடவில்லை என்று கூறிவிட்டு இன்று மீண்டும் போட்டியிடுகிறேன் என்று மன்சூர் அலிகான் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version