இந்தியா

பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் வாலிபர்!

Published

on

கேரள மாநிலத்தில் இரயில்வேயில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருகிறார் ஹரிஸ் ரகுமான் (வயது 23). எப்போதும் போல கோழிக்கோட்டில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு பணிக்கு சென்று இருக்கிறார். அந்நேரத்தில், திடீரென அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறி உள்ளது.

செல்போன் வெடிப்பு

பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததால், ஜீன்ஸ் பேன்டிலும் தீப் பிடித்தது. இருப்பினும், உடனடியாக தீயை ஹரிஷ் ரகுமான் அணைத்து விட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த செல்போன் விபத்தில், அவருக்கு லேசான தீக்காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. திடீரென்று வெடித்து சிதறிய அவருடைய செல்போன் 2 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டது என ரகுமான் தெரிவித்தார். அருகில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரகுமான், முதல் கட்ட சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

செல்போன் விபத்துகள்

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கூட, கேரளாவில் தந்தையின் செல்போனில் கேம்ஸ் விளையாடி கொண்டிருந்த போது திடீரென செல்போன் வெடித்ததால் 8 வயதுடைய சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல், சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையில், செல்போனில் சார்ஜ் செய்து கொண்டே போன் பேசிய இளைஞர், மின்சாரம் தாக்கி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்நிலையில், கேரளாவில் மீண்டும் ஒருமுறை செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டு இருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version