இந்தியா

வீட்டுக்குள் பாம்பை வர விடாமல் காவல் காத்த பூனை.. வைரல் வீடியோ…

Published

on

மனிதர்கள் நாய், பூனை இவற்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். பொதுவாக நாய்கள் தனது எஜமானுக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடி வந்து உதவும். இது தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே வெளியானது. ஆனால், பூனை ஒன்று தனது எஜமான் குடும்பத்திற்காக களமிறங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒரு வீட்டினுள் நுழைய முயன்றது. ஆனால், அந்த வீட்டில் வளரும் பூனை அந்த பாம்பை உள்ளே வர விடாமல் வீட்டின் வெளியிலேயே தடுத்து நிறுத்தியது. பாம்பு படமெடுத்து நின்றும் கூட பூனை அசரவில்லை. பாம்பு பிடிப்பவருக்கு தகவல் கொடுத்து அவர் வந்து அந்த பாம்பை பிடிக்கும் வரைக்கும் சுமார் 30 நிமிடம் அந்த பூனை அந்த இடத்தை விட்டு எங்கும் நகரவில்லை.

எனவே, இந்த பூனையை வளர்ப்பவர்கள் மட்டுமில்லாமல் அக்கம் பக்கத்தினரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

YouTube video player

Trending

Exit mobile version