இந்தியா
2ஆம் வாய்ப்பாடு கூட தெரியவில்லையா? திருமணத்தை நிறுத்திய மணமகள்!
இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியவில்லை என்பதால் திருமணத்தை பாதியிலேயே நிறுத்திய மணமகள் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மஹோபா என்ற பகுதியில் இளம் பெண் ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருமணம் குறித்த சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மணமகன் எழுதப்படிக்க தெரியாதவர் என்ற தகவல் மணமகளுக்கு கிடைத்தது.
மணமகளை சமாதானப்படுத்த மணமகன் வீட்டினர் மற்றும் மணமகள் வீட்டினர் எவ்வளவோ முயற்சி செய்தும் படிப்பறிவில்லாத ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற தனது முடிவில் மணமகள் உறுதியாக இருந்ததால் திருமணம் நின்று போனது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.