இந்தியா

2ஆம் வாய்ப்பாடு கூட தெரியவில்லையா? திருமணத்தை நிறுத்திய மணமகள்!

Published

on

இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியவில்லை என்பதால் திருமணத்தை பாதியிலேயே நிறுத்திய மணமகள் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மஹோபா என்ற பகுதியில் இளம் பெண் ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருமணம் குறித்த சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மணமகன் எழுதப்படிக்க தெரியாதவர் என்ற தகவல் மணமகளுக்கு கிடைத்தது.

உடனே இதை உறுதி செய்வதற்காக மணமேடையிலேயே மணமகனை இரண்டாம் வாய்ப்பாடு சொல்லும்படி கூறினார். ஆனால் மணமகன் இரண்டாம் வாய்ப்பாடு கூறுவதற்கு திணறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் இரண்டாம் வாய்ப்பாடு என்ற அடிப்படை கூட தெரியாத ஒருவரை எப்படி நான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற கேள்வி எழுப்பி உடனடியாக திருமணத்தை நிறுத்தினார். இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மணமகளை சமாதானப்படுத்த மணமகன் வீட்டினர் மற்றும் மணமகள் வீட்டினர் எவ்வளவோ முயற்சி செய்தும் படிப்பறிவில்லாத ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற தனது முடிவில் மணமகள் உறுதியாக இருந்ததால் திருமணம் நின்று போனது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version