சினிமா செய்திகள்

’தளபதி 63’க்காக சென்னையில் தயாராகி வரும் பிரம்மாண்ட கால்பந்தாட்ட மைதானம்!

Published

on

சென்னை அருகே உள்ள இவிபி பூங்காவில் ’தளபதி 63’ படத்துக்காக பிரம்மாண்ட கால்பந்தாட்ட மைதான செட் அமைக்கப்பட்டு வருகிறது.

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ’தளபதி-63’.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படத்துக்காக சென்னையை அடுத்து பூந்தமல்லி செல்லும் வழியில் உள்ள இ.வி.பி பூங்காவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் இணைந்துள்ள மூன்றாவது படம் வடசென்னை மற்றும் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், ’பரியேறும் பெருமாள்’ கதிர், ’மேயாத மான்’ இந்துஜா, யோகிபாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

நடிகர் ஷாரூக்கான் ஸ்பெஷல் ரோலில் நடிக்க உள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் லீக் ஆகின. வரும் தீபாவளி விருந்தாக தளபதி 63 திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version