சினிமா செய்திகள்
இதனால் தான் தமிழ் படங்களில் நடிக்கவில்லை – மனம் திறந்த வித்யா பாலன்!
தமிழ் சினிமாவில் நடிக்கவே தான் ஆரம்பத்தில் முயற்சி செய்ததாகவும், உடல் எடை காரணமாக சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தன்னை ஒதுக்கினார்கள் என நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் நடிகை வித்யா பாலன். இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்து வெளிவந்த கனா கண்டேன் படத்தில் வித்யா பாலன் ஒரு குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க நினைத்த அவரை, உடல் பருமனை சுட்டிக் காட்டி ஒதுக்கி விட்டனராம்.
இதனால், பாலிவுட் சென்ற வித்யா பாலன், தேசிய விருது நடிகை அளவுக்கு வளர்ந்து மீண்டும் தமிழில் அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமாகிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வித்யா பாலன் இதுகுறித்து பகிர்ந்துள்ளார்.