தமிழ்நாடு
கவுன்சிலிங் தந்தும் பயனில்லை.. எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் அனுபவித்த கொடூரம்!
விருதுநகர்: கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் கடும் மனஉளைச்சலில் இருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெண் கடந்த வாரம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த சோகைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு தானமாக பெறப்பட்ட ரத்தத்தில் எச்ஐவி நோய் தோற்று இருந்தது. இதனால் அந்த கர்ப்பிணி பெண் எச்ஐவியால் பாதிக்கப்பட்டார்.
தற்போது அவர் மதுரை ராஜாஜி சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று ரத்தத்தை கொடுத்த 19 வயது இளைஞர் ராமநாதபுரத்தில் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
கடந்த 4 நாட்களாக அந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இளைஞர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.