பிற விளையாட்டுகள்

தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதக்கம் உறுதி: தங்கம், வெள்ளி இரண்டும் கிடைக்க வாய்ப்பா?

Published

on

தற்போது நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கு பதக்கம் உறுதி என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர் என்பதும் நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் கலந்துகொள்ளும் உயரம் தாண்டுதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் உயரம் தாண்டுதல் பிரிவின் இறுதிச் சுற்றில் 3 இந்திய வீரர்கள் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். தங்கவேலு மாரியப்பன் வருண்பட்டி மற்றும் ஷரத்குமார் ஆகிய மூவரும் இறுதி சுற்றில் மோதும் 9 வீரர்களில் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் மாரியப்பன், ஷரத்குமார் ஆகிய இருவருக்கும் பதக்கம் உறுதி செய்யப்பட்டதாகவும் இருவரில் தங்கம், வெள்ளி யாருக்கு என்பதில் தான் போட்டியாக உள்ளதாகவும் சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க வீரர்கள் சாம் குரூவ், மாரியப்பன், ஷரத்குமார் ஆகிய மூவரில் யாருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என்ற நிலைதான் தற்போது உள்ளது.

மொத்தத்தில் தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய மூன்றில் இரண்டு பதக்கங்கள் இந்தியாவுக்குக் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.இதனை அடுத்து மாரியப்பனுக்கு தங்கம் கிடைக்க வேண்டும் என வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version