தமிழ்நாடு
மீண்டும் பொய் சொல்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி: தங்கர்பச்சான் அறிக்கை
அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டமன்றத்தில் மீண்டும் பொய் சொல்லி இருக்கிறார் என தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனது வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி மின் கட்டணம் குறித்த என் கோரிக்கையை உடனே சரி செய்து விட்டதாகவும், நான் அதற்குப் பின் மன்னிப்பு கோருவதாகவும், இரண்டாவது முறையாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கேள்வி ஒன்றுக்கு சட்டமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
உண்மைக்கு மாறான செய்தியை மீண்டும் சட்டமன்றத்தில் பதிவு செய்ததுடன் ஒரு மாதத்திற்கு முன் முதலமைச்சருக்கு நான் விடுத்திருந்த கோரிக்கை குறித்து பதிலளிக்குமாறு எனது கோரிக்கை மின் கட்டணத்தை சரிபார்த்துக்கொள்ள மாதாந்திர மின் கட்டண முறையை செயல்படுத்தாமல் இருந்ததால்தான் மின் கட்டணமாக செலுத்த வேண்டி உள்ளது என்பது குறித்துதான்.
முதலமைச்சர் இது குறித்து தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பின் போதும், திமுக தேர்தல் அறிக்கையிலும், மக்களிடத்திலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளேன்.
இது என்னுடைய வீட்டின் பிரச்சினை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் பிரச்சனை என்பதையும் அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். இப்போதாவது மின்துறை அமைச்சர் என் கோரிக்கை உணர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என நம்புகிறேன்’ என ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
எனது கோரிக்கை மின் கட்டணத்தை சரி பார்க்கக்கோரி அல்ல. மாதாந்திர மின் கட்டண முறையை செயல் படுத்தாததினால்தான் மின் கட்டணம் பல மடங்காக செலுத்த வேண்டியுள்ளது என்பது குறித்துதான். #tnebminister. #CMOTamilnadu pic.twitter.com/dyJW94rg19
— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) September 8, 2021