தமிழ்நாடு
செத்தப்பாம்பை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்: தினகரனை காட்டமாக விளாசிய தங்க தமிழ்செல்வன்!
அமமுகவில் டிடிவி தினகரனுக்கு விசுவாசமாகவும், முக்கிய தலைவர்களில் ஒருவருமாக இருந்த தங்க தமிழ்செல்வன் தற்போது திமுகவில் உள்ளார். இவர் டிடிவி தினகரனை சத்தப்பாம்பு என மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளது அமமுக தொண்டர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட வார்த்தை மோதலையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை தேனி அருகே உள்ள வீரபாண்டியில் அமமுகவினர் உள்ளிட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தங்க தமிழ்செல்வன், ஒருமுறை அதிமுகவினரே நாடாளுமன்றத் தேர்தலில் 6 ஆயிரம் ஓட்டில் என்னை தோற்கடித்தனர். ஜெயலலிதா காலமான பிறகு இநத ஆட்சி ஊழல் ஆட்சி என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறோம். வெளியே வந்த பிறகு ஒரு கட்சிக்குப்போகிறோம். மக்கள் அந்த கட்சியை விரும்பவில்லை. டிடிவி தினகரன் கட்சியை மக்கள் ரசிக்கவில்லை. விரும்பவில்லை. செத்தப்பாம்பை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதைப்பற்றி பேசுவது தவறு என்று நினைக்கிறேன் என்றார் அதிரடியாக.