தமிழ்நாடு

டாடி என்று சொன்ன மோடி ஏன் காப்பாற்றவில்லை: ராஜேந்திரபாலாஜி குறித்து தங்கத்தமிழ் செல்வன்!

Published

on

பிரதமர் மோடியை டாடி என்று கூறிய ராஜேந்திர பாலாஜியை பிரதமர் மோடி ஏன் காப்பாற்றவில்லை என திமுக தேனி மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களிடம் சிக்காமல் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய தேனி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் ராஜேந்திரபாலாஜி உண்மையிலேயே தவறு செய்யவில்லை என்றால் ஏன் ஒளி ஓடி ஒளிய வேண்டும் என்றும் அவர் தவறு செய்ததால் தான் தலைவராக இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி எங்கள் டாடி என்று சொன்ன ராஜேந்திர பாலாஜியை மோடி காப்பாற்றவில்லை, என்ன காரணம் என்றால் அவர் தவறு செய்திருக்கிறார். அதனால்தான் அவர் காப்பாற்றவில்லை என்றும் கூறினார். இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version