Connect with us

தமிழ்நாடு

சமூக நீதிக்காக பாடுபட்ட தந்தை பெரியார் பிறந்த நாள்!

Published

on

சமூக நீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களின் 143வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் தந்தை பெரியாரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது சமூகநீதியை சமன்படுத்தியவர் என்பதுதான். ஈரோட்டில் வெங்கட நாயக்கர் மற்றும் சின்ன தாயம்மை ஆகியோருக்கு மகனாக 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பத்தினர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் என்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெரியார் சிறப்பாக பேசுவார்.

சமூக சீர்திருத்தம், சாதி வேற்றுமை ஆகியவற்றுக்காக பாடுபட்டவர்களில் ஒருவர் பெரியார். மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைய வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர், சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவுவாதம் ஆகியவற்றில் புகழ்பெற்று விளங்கினார்.

மூடநம்பிக்கைக்கு காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை பெயரால் உருவான சமயங்கள் ஆகியவற்றுக்கு எதிராக இவர் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். சாதி வேறுபாடுகளை களைவதற்காக இவரது பணி சிறப்பு வாய்ந்தது. இவருடைய பகுத்தறிவு கொள்கைகள், சுயமரியாதைக் கொள்கைகள் தமிழகம் முழுவதும் பரப்பப்பட்டது.

பேரறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி, புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா, வைகோ ஆகியோர் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றியவர்களில் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியாரின் அவர்களின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே. தந்தை பெரியாரின் இன்றைய பிறந்த நாளில் அவரது கொள்கைகளை கடைபிடித்து நடப்போம் என அனைவரும் சூளுரைப்போம்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்