சினிமா செய்திகள்
தாமரைக்கு பிரிட்ஜ், மைக்ரோ ஓவன் வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது என்பதும் 24 மணி நேரமும் ஒளிபரப்பானாலும் போரடிக்காத வண்ணம் இந்த நிகழ்ச்சியை பிக்பாஸ் குழுவினர் தொகுத்து வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் போட்டியாளர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் திறமையானவர்கள் என்பதால் வாத விவாதங்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பற்றவைக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி, எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கும் பாலாஜி முருகதாஸ், தனக்கு மனதில் தோன்றியதை சொல்லும் தாமரைச்செல்வி, யாரையும் தன்னுடைய கோபத்தால் வீழ்த்தும் வனிதா என போட்டியாளர்கள் அனைவருமே சுறுசுறுப்பாக உள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின்போது தாமரை 5 வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளரான வருண் தனக்கு இரண்டு டோர் வைத்த பிரிட்ஜ் மற்றும் மைக்ரோ ஓவன் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்ததாகவும் அந்த பையன் மிகவும் நல்லவன் என்றும் சக போட்டியாளர்களிடம் கூறிய காட்சிகள் உள்ளன.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய உடன் தாமரைக்கு ஒருசில பொருள்களை வருண் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்ததாக ஏற்கனவே தகவல் வெளியானதை தாமரை தற்போது உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாமரை, பிக்பாஸ், அல்டிமேட்,