சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே வெளியே வந்தார்களா பிரியங்கா, பாவனி: தாமரை கூறிய அதிர்ச்சி தகவல்

Published

on

பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு முறை சென்று விட்டால் போட்டியில் இருந்து வெளியேறும் வரை வெளியே செல்ல முடியாது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியேறிய தாமரை தானும், தன்னுடன் பிரியங்கா, பாவனி ஆகியோர்களும் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள் என கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் தாமரை என்பதும் அவர் அனைத்து பிக்பாஸ் பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்தார் என்பதும், கடந்த ஞாயிறன்று அவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளம் மூலம் தாமரை தனது ரசிகர்களுடன் பேசியபோது ஏற்கனவே தானும், பிரியங்கா மற்றும் பாவனி ஆகியோர் ஏற்கனவே வெளியே வந்தோம் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு உடல்நலம் இல்லாமல் இருந்தபோது தன்னை பாவனி மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் என்றும் அதன் பிறகு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதிலிருந்து தாமரை, பாவனி மற்றும் பிரியங்கா ஆகிய மூவரும் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியே வந்து உள்ளார்கள் என்பது தெரியவருகிறது. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு உடல் நிலையில் ஏதோ கோளாறு ஏற்பட்டால் மருத்துவர் வந்து பார்க்க மாட்டாரா? போட்டியாளர்கள் தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பதை வெளியே செல்லக்கூடாது என்று ஒப்பந்தத்தில் தாமரை கையெழுத்திட்டுள்ள நிலையில் அவர் வழக்கம்போல் அப்பாவித்தனமாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது பிக்பாஸ் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version