டிவி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published

on

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒருவராம் மட்டுமே உள்ள நிலையில் இந்த வாரம் ஒருவர் வெளியாக வேண்டும்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் தாமரை, ராஜு, பாவனி, பிரியங்கா, நிரூப், அமீர் உள்ளிட்டவர்கள் உள்ளனர். சிபி 12 லட்சம் பெட்டியுடன் வெளியேறிவிட்டார்.

நிரூப், அமீர் இருவரும் பிக்பாஸ் ஃபைனல் செல்வதற்கான டிக்கெட் வென்றுள்ளனர். எனவே தாமரை, ராஜு, பாவனி, பிரியங்கா நால்வரில் ஒருவர் இந்தவாரம் வெளியேற வேண்டும்.

ராஜு எப்போது ஓட்டு எடுப்பில் முதலில் வெற்றிபெற்று சேவ் ஆகிவிடுவார். எனவே அவருக்குக் கவலையில்லை. பிரியங்கா, பாவனி இருவருக்கும் நல்ல ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எனவே அவர்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

சென்ற வாரம் நாமினேஷனில் கூட ராஜுவை தொடர்ந்து பிரியங்கா, பாவனி உள்ளிட்டவர்கள் சேவ் ஆன பிறகு தான் தாமரை சேவ் ஆனார்.

எனவே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து தாமரை தான் வெளியேறுவார் என தகவல்கள் கூறுகின்றன. ஒரு நாடக பின்னணியிலிருந்து வந்து தாமரை இறுதி வாரத்திற்கு முன்பு வரை போட்டியிலிருந்து மிகப் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

டிவிட்டரில் இன்று மதியம்முதல் தாமரைதான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தாமரை இதுவரையில் பிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற பல போட்டிகள் வெற்றிபெற்றுப் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். இப்போது வீட்டில் உள்ளவர்களில் ஒருவர் கூட தாமரைக்கு ஈடாகப் போட்டிகளில் வென்றதில்லை. கண்டிப்பாக இது தாமரையின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.

seithichurul

Trending

Exit mobile version