சினிமா செய்திகள்

கேவலம் கேம்க்காக பாசத்தை இழப்பிங்களா? கதறி அழும் தாமரை!

Published

on

தாமரையின் காயினை ஸ்ருதி திருடிய விட்டதை அடுத்து கேவலம் கேம்க்காக பாசத்தை இழப்பிங்களா? என அழுது கொண்டே தாமரை ஸ்ருதியை திட்டும் காட்சிகள் இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய அம்சமான பஞ்சதந்திரம் டாஸ்க்கில் கிடைத்த காயின்களை ஐந்து போட்டியாளர்கள் வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. அவர்களில் ஒருவர் தாமரை என்பதும், அவர் தன்னுடைய காயினை பாத்ரூமில் மறைத்து வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அந்த காயினை ஸ்ருதி எடுத்துவிட ஸ்ருதிக்கும் தாமரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்பதை முதல் புரமோவில் பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த புரமோவில் ஸ்ருதியை மீண்டும் திட்டியபடி தாமரை பேசுகிறார். கேவலம் கேம்க்காக பாசத்தை இழப்பிங்களா? என்று அவர் கூறுவதும், இது ஒரு கேம் இதில் பாவ புண்ணியம், பாசம் எல்லாம் பார்க்க முடியாது என்று ஸ்ருதி கூறுவதுமான காட்சிகள் உள்ளன.

மேலும் இப்படி எல்லாம் பேசாதீர்கள் என ஸ்ருதி கூற, ‘போய் விடு பாப்பா உன் மேல நான் பயங்கர கோபத்தில் இருக்கிறேன் என்று எச்சரித்து தாமரை பேசும் காட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் வைத்திருக்கும் காயினை கைப்பற்றுவது என்பது பிக்பாஸ் விதிகளில் ஒன்றாக இருக்கும்போது ஸ்ருதி செய்தது சரியே என்று தான் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

கேம் என்று வரும்போது பாவபுண்ணியம் பாசம் என்பதெல்லாம் பார்க்க முடியாது என்றும் அவ்வளவு பாசமாக இருப்பவர்கள் எப்படி நாமினேஷன் செய்ய முடியும் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். பிக்பாஸ் கேம் என்பது என்னவென்றே இன்னும் புரியாமல் இருக்கும் தாமரைக்கு எப்போது புரியுமோ என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version