சினிமா செய்திகள்

தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டி… வெறித்தனமாக பயிற்சி செய்யும் ‘தல’ அஜித்!

Published

on

தல அஜித் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொள்வதற்கு என தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக தல அஜித் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மாநில, தேசிய அளவில் பங்குபெற்று வெற்றியும் பெற்று வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு கோவையில் நடந்த போட்டி டெல்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் அஜித்.

இந்த வகையில் 2020-ம் ஆண்டு கொரோனாவால் எந்தப் போட்டியும் நடக்காத சூழலில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கிறார் அஜித். இதற்காக சென்னை எழும்பூரில் உள்ள ரைபிள் க்ளப் பயிற்சி மையத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தினமும் பயிற்சிக்கு வந்து செல்லும் அஜித் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என வாடகை காரில் தொப்பி, கண்ணாடி போட்டுக் கொண்டு வந்து செல்கிறார்

author avatar
seithichurul

Trending

Exit mobile version