சினிமா செய்திகள்
கொரோனா கட்டுக்குள் வரட்டும்… வலிமை படக்குழுவினருக்கு ’தல’ அஜித் புதிய உத்தரவு!
வலிமை படத்தை எப்போது ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என படக் குழுவினருக்கு நடிகர் அஜித் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
தற்போது திரை அரங்குகளில் 100 சதவிகிதம் மக்களை அனுமதிக்கலாம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு மத்திய அரசும் நீதிமன்றமும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. கூடுதலாக விஜய் மற்றும் சிம்புவுக்கு எதிராக திரைத்துறையினர் உட்பட பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் சில ரசிகர்கள் தல அஜித் நடித்துள்ள வலிமை படத்துக்கான அப்டேட் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். தற்போது வலிமை படக்குழுவினருக்கு தல அஜித் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். ’முதலில் கொரோனா பிரச்னை முடிவுக்கு வரட்டும். நோயின் தாக்கம் அதிகரிக்கும் சூழல் உள்ளதாக பல மருத்துவ ஆய்வாளர்களும் எச்சரிக்கும் சூழலில் படத்தை வெளியிட வேண்டாம்’ என அஜித் கேட்டுக் கொண்டுள்ளாராம்.
மேலும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவரிடமும் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரையில் வலிமை பட ரிலீஸ் வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளாராம்.