உலகம்
தாய்லாந்தில் மன்னரை எதிர்த்து கருத்து தெரிவித்த பெண்ணுக்கு கிடைத்த கொடூர தண்டனை!
தாய்லாந்தில் மன்னரை எதிர்த்து பேசியதாக பெண் ஒருவருக்கு 43 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. இந்த குடியாட்சியில் சீர்த்திருந்தங்கள் கொண்டு வர வேண்டும், மன்னருக்கு உள்ள அதிகாரங்கள் குறைக்க வேண்டும் என்று மாணவ அமைப்பினர் பல்வேறு அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அரசுக்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்கும் வகையில் லெஸ் மஜாஸ்ட்டே என்ற சட்டத்தை தாய்லாந்து அரசு கையில் எடுத்தது. அதன்படி, மன்னரை எதிர்த்து பேசுபவர்கள் மீது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், முன்னாள் அரசு பெண் ஊழியர் ஒருவருக்கு மன்னரை எதிர்த்து பேசியதாக 43 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர் மன்னரை எதிர்த்து யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணையில், மன்னருக்கு எதிராக பேசியது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த பெண்மணிக்கு 43.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. லெஸ் மஜாஸ்ட்டே சட்டத்தின் கீழ் மிகசொற்பமாகவே இது போன்ற சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளன