ஆன்மீகம்
அமாவாசைகளில் மிகவும் ஸ்பெஷல் ‘தை அமாவாசை’.. என்ன சிறப்பு தெரியுமா?
தமிழ் மாதங்களில் தை அமாவாசை விரதம் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. தை அமாவாசை தினத்தில் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரைக் கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பார்கள். அதை அமாவாசை விரதம் என்று அழைப்பார்கள்.
அமாவாசை ஒவ்வொரு மாதமும் வந்தாலும், தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை சிறப்பு வந்ததாகப் பார்க்கப்படுகிறது. தை அமாவாசை அன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து சிறப்புப் பூஜை செய்வார்கள்.
தமிழகத்தில் ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, பவானி எனப் பல முக்கிய ஆறு மற்றும் கடல் சங்கமிக்கும் இடங்களில் எல்லாம் தை அமாவாசை சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
தை அமாவாசை திதியன்று விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிப்பட்டால், எந்நாளும் இன்பமாக வாழலாம்.
2021-ம் ஆண்டு தை அமாவாசை பிப்ரவரி 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது.