தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி டெட் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Published

on

ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 13ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இந்த தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வு எழுதுவதற்காக சுமார் ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் ஏற்கனவே விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் குறிப்பாக பி.எட் முடித்தவர்கள் இந்த தேர்வு எழுதுவதற்கு வசதியாக கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஏப்ரல் 26ஆம் தேதி வரை டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. ஏப்ரல் 26ம் தேதிக்குள் இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version