ஆட்டோமொபைல்

லாபமே பார்க்கவில்லை, இருந்தாலும் உலகின் மதிப்பு வாய்ந்த கார் நிறுவனமாக உருவெடுத்த டெஸ்லா!

Published

on

எலன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனம் உலகின் மதிப்பு வாய்ந்த கார் நிறுவனமாகப் புதன்கிழமை உருவெடுத்துள்ளது.

இதற்கு முன்பு டொயாட்டா நிறுவனம் உலகின் மதிப்பு வாய்ந்த கார் நிறுவனமாக இருந்து வந்தது. ஆனால், புதன் கிழமை டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 4 சதவீதம் அதிகரித்த நிலையில், நிறுவனத்தின் மதிப்பு 208 பில்லியன் டாலாக அதிகரித்தது.

டொயாட்டா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 203.21 பில்லியன் டாலராக உள்ளது. டொயாட்டா நிறுவனம் ஆண்டுக்கு 1 கோடி கார்களை தயாரிக்கிறது.

டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 208 பில்லியன் டாலராக அதிகரித்து இருந்தாலும், இதுவரை லாபமே பார்த்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version