தமிழ்நாடு

வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள்: வீடியோ வைரலானதால் சஸ்பெண்ட்!

Published

on

வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் வகுப்பறையில் மது அருந்திய 10 பேர் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது .காஞ்சிபுரம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறையில் மாணவிகள் அமர்ந்து கொண்டு குளிர்பானத்தில் மது கலந்து 10க்கும் மேற்பட்ட மாணவிகள் அருந்தியதாக தெரிகிறது. இதனை வீடியோ எடுத்த மாணவிகளில் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது .

இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. மது அருந்திய கல்லூரி மாணவிகளை அழைத்து அறிவுரை கூறிய கல்லூரி நிர்வாகிகள் இதுமாதிரி இனிமேல் நடக்கக்கூடாது என்று கூறியதோடு, பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை சஸ்பெண்ட் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து பெற்றோர்களுக்கும் கல்லூரி நிர்வாகிகள் அறிவுரை கூறியதாக தெரிகிறது. கல்வி பயில வேண்டிய வகுப்பறையில் மாணவிகள் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version