சினிமா செய்திகள்

போதையில் கார் ஓட்டியதால் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சீரியல் நடிகை!

Published

on

சீரியல் நடிகையின் ஆண் நண்பர் போதையில் கார் ஓட்டியதால் கார் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் சீரியல்நடிகை பரிதாபமாக உயிரிழந்தார் என்றும் செய்திகள் வெளி வந்திருப்பது திரை உலகினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தெலுங்கு சீரியல் மற்றும் வெப்தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் காயத்ரி என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தனது நண்பரும் தொழிலதிபருமான ரோகித் என்பவருடன் ஹோலி கொண்டாட்டத்தில் சமீபத்தில் ஈடுபட்டார்.

அதன்பிறகு இருவரும் மது அருந்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது காரை ரோகித் மிக வேகமாக ஓட்டியுள்ளார். மது அருந்திவிட்டு போதையில் அவர் காரை ஓட்டியதால் மகேஸ்வரி என்ற பெண்ணின் மீது அந்த கார் மோதி விபத்துக்குள்ளானது தெரிகிறது.

இந்த விபத்தில் மகேஸ்வரி மற்றும் காரிலிருந்த காயத்ரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ரோகித் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து ஆந்திர மாநில போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Trending

Exit mobile version