உலகம்

விறுவிறுப்பாக நடந்த கால்பந்து போட்டியில் கோல் அடித்த பார்வையாளர்.. வைரல் வீடியோ

Published

on

கால்பந்து போட்டி ஒன்று விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென பார்வையாளர் ஒருவர் கோல் போட்ட சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கால்பந்து போட்டி என்பது உலகம் முழுவதும் ரசிக்கக் கூடிய ஒரு விளையாட்டு என்பதும், கோடிக்கணக்கான மக்கள் கால்பந்து போட்டிக்கு ரசிகர்களாக உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்த்த பார்வையாளர்கள் எண்ணிக்கை சாதனை செய்தது என்பதும் அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றபோது நடந்த இறுதிப் போட்டியை மட்டும் பில்லியன் கணக்கானோர் நேரலையில் பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் கால்பந்து போட்டிக்கு ரசிகர்கள் இருப்பதால் தான் கால்பந்து போட்டி எங்கு நடந்தாலும் அதன் ஸ்கோர்களை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் விருப்ப படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கால்பந்து போட்டி மைதானத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்துள்ளது.

அந்த வகையில் கால்பந்து போட்டி ஒன்று விறுவிறுப்பாக நடைபெற்ற கொண்டிருந்தபோது பார்வையாளர் ஒருவர் தனது பேப்பர் ராக்கெட்டால் கோல் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்து மைதானத்தில் இரு அணி வீரர்களும் கோல் போடுவதற்காக விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது பார்வையாளர் ஒருவர் திடீரென பேப்பர் ஒன்றை எடுத்து கையால் ராக்கெட்டை செய்தார்.

அதன் பிறகு அவர் அந்த ராக்கெட்டை கால்பந்து மைதானத்தை நோக்கி வீசினார். அந்த பேப்பர் ராக்கெட் முதலில் கால்பந்து மைதானத்தின் மையத்தில் சென்ற போது இரு அணி கால்பந்து வீரர்களும் அந்த பேப்பர் ராக்கெட் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதன்பிறகு அந்த பேப்பர் ராக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக பறந்து ஒரு கட்டத்தில் கோல் கீப்பரையும் ஏமாற்றி கோல் போஸ்டுக்கு சென்று கோல் போட்டது.

இதனையடுத்து பேப்பர் ராக்கெட்டை விட்ட அந்த டீன் ஏஜ் பார்வையாளர் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க அவரை சுற்றி இருந்தவர்கள் அவரை பாராட்டினர். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் கால்பந்து வீரர்களை விட மிக அபாரமாக கோல் போட்டுள்ளார் என கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version