Connect with us

தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் எதிரொலி: துப்பாக்கி லைசன்ஸ் கேட்கும் இளம்பெண்கள்!

Published

on

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்காரங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரண்டு மாணவிகள் தங்களை தற்காத்துக்கொள்ள துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணியை சந்தித்து மனு கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பெண்களை சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு, அன்பாக பேசி, அவர்களை நயவஞ்சகமாக அழைத்து பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக பிடித்து தொடர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் மற்றும் பணம் பிடுங்குதல் போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களால் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். பலரும் இந்த கொடூர சம்பவத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் மாவட்ட ஆட்சியரை பார்த்து இரண்டு மாணவிகள் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த மனு மேலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதில், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பார்க்கும் போது, எங்களுக்கு அச்சமாக உள்ளது. இத்தனை நாட்களாக காவல்துறை இதை கண்டுகொள்ளாமல், அல்லது கண்டுபிடிக்காமல் இருந்துள்ளது. எனவே எங்களை நாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது. நாங்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு, எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அரசின் மீதும், காவல்துறையின் மீது நம்பிக்கையை இழந்து, தங்களை தற்காத்துக்கொள்ள துப்பாகி லைசன்ஸ் கேட்கும் நிலை இளம்பெண்களுக்கும், மாணவிகளுக்கும் வந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா15 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!