தமிழ்நாடு

3 ஆண்டுகள் காதலில் 2 முறை கர்ப்பமானேன்: இளம்பெண்ணின் கண்ணீர்!

Published

on

சென்னையில் இளம்பெண் ஒருவர் தனது காதலன் வீட்டின் முன்னர் தன்னை திருமணம் செய்துகொள்ள தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

சென்னை பூந்தமல்லி குமணன்சாவடியை சேர்ந்த 21 வயதான ஆஷா என்ற இளம்பெண்ணும் அந்த பகுதியை சேர்ந்த 24 வயதான வினோத் என்பவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனால் நண்பர்களான இவர்கள் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர். மூன்று ஆண்டுகளாக காதலித்த வந்தனர் இவர்கள்.

வினோத் இளம்பெண் ஆஷாவை திருமணம் செய்வதாக கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் இரண்டு முறை ஆஷா கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் வினோத் கூறியதால் கர்ப்பத்தையும் கலைத்தார் ஆஷா. அதன் பின்னர் வினோத் ஆஷாவுடன் பழகுவதை புறக்கணித்து வந்ததையடுத்து பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஆஷா.

இதனையடுத்து போலீசார் விசாரணையில் இரண்டு மாதம் கழித்து திருமணம் செய்துகொள்கிறேன் என கூறி இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் ஆஷா வீட்டினர் திருமணம் குறித்து பேச தொடர்பு கொண்டபோது வினோத் மற்றும் அவரது வீட்டினர் மறுத்துள்ளனர். இதனையடுத்து ஆஷா தனது காதலன் வினோத் வீட்டின் முன்னர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனக்கு நியாயம் கிடைக்கும் வரை இங்கிருந்து போக மாட்டேன் என தர்ணாவில் ஈடுபட்ட ஆஷாவிடம் தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து அவர் தனது போராட்டத்தை கைவிட்டார்.

seithichurul

Trending

Exit mobile version