இந்தியா
சிகிச்சைக்கு வந்த 17 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: அரசு மருத்துவமனை ஊழியர்கள் அரங்கேறிய கொடூரம்!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு வந்த 17 வயது இளம்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் உள்ள டிபி அரசு மருத்துவமனையில் 17 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை கடந்த 23-ஆம் தேதி இரவு சிவானந்தன் என்ற வார்ட் பாய் ஊசி போடனும் கீழே உள்ள அறைக்கு வாருங்கள் என அழைத்துள்ளார். அப்போது அந்த இளம்பெண் தனது தாயை துணைக்க அழைக்க முயன்றபோது அவர்களை தொந்தரவு செய்ய வேண்டும் நீங்கள் மட்டும் வாருங்கள் என அழைத்து சென்றுள்ளான் சிவானந்தன்.
அந்த அறைக்குள் சென்றதும் அந்த இளம்பெண்ணுக்கு மாத்திரை ஒன்றை கொடுத்துள்ளான் சிவானந்தன். அதன் பின்னர் அந்த பெண் மயக்கமடைந்துள்ளார். பின்னர் சிவானந்தனும் அங்கு பணிபுரியும் விஷால் என்பவரும் இணைந்து அந்த இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் மயக்கம் தெளிந்ததும் அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அந்த பெண்ணின் தாய் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனை ஊழியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையிலேயே ஊழியர்களால் சிகிச்சைக்கு வந்த இளம்பெண் கூட்டு பாலியல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.